இராமலிங்க அடிகளார்

இராமலிங்க அடிகளார்

இராமலிங்க அடிகளார் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர். இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தார். பெற்றோர்இராமையா - சின்னம்மையார்


ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. இவர் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. 


சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே. இவர் அனைத்து மத நல்லிணக்கத்திற்காக  சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர். அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர். 


வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. வடலூர் சத்திய தருமச்சாலையில் பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல் தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது. இவர் வாழ்ந்த காலம் 05.10.1823 முதல் 30.01.1874 வரை ஆகும்.


                                                                          

வழிகாட்டும் வள்ளலார்!
ராமையா&சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக  ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர்.

ராமலிங்கம் பிறந்த ஆறாவது மாதத்தில் தந்தை ராமையா காலமானார். சின்னம்மை, தன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

மூத்த மகன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயின்றார். புராணச் சொற்பொழிவில் வல்லவரானார். சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் குடும்பம் நடத்தி வந்தார்.
புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு, ஒருமுறை உடல்நலம் குன்றியதால் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.

அன்றைய தினம் சபாபதியின் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்த னர். அண்ணன் சொன்ன படியே சில பாடல்களை மனமுருகப் பாடினார் ராமலிங்கம். இதன்பின், அவரிடம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அங்கு கூடியிருந்தோர் வெகுநேரம் வற்புறுத்தினர். எனவே, ராமலிங்கமும் அதற்கு இசைந்தார்.

அந்தச் சொற்பொழிவு இரவில் நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல் சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது.

பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்துகொண்டார்.


                                             -----------------------
                                                   
1. ''கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்'' எனக்கூறியவர் யார்?
விடை : இராமலிங்க அடிகளார்
2. இராமலிங்க அடிகளார் அவர்களின் சிறப்புப்பெயர் என்ன?
விடை : திருவருட்பிரகாச வள்ளலார்
3. இராமலிங்க அடிகளார் அவர்களின் பெற்றோர் யாவர்?
விடை : இராமையா - சின்னம்மையார்
4. இராமலிங்க அடிகளார் அவர்கள் பிறந்த ஊர் எது?
விடை : கடலூர் மாவட்டத்திலுள்ள மருதூர்
5. இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் யாவை?
விடை : ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
6. இராமலிங்க அடிகளார் இயற்றிய பாடல்களின் தொகுப்பின் பெயர் என்ன?
விடை : திருவருட்பா
7. ''வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்'' இது யார் கூற்று?
விடை : இராமலிங்க அடிகளார்
8. பசித்துயர்போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலை அமைத்தவர் யார்?
விடை : இராமலிங்க அடிகளார்
9. மக்களுக்கு அறிவுநெறி விளங்க இராமலிங்க அடிகளார் எதனை நிறுவினார்?
விடை : ஞானசபை
10. இராமலிங்க அடிகளார் அவர்கள் வாழ்ந்த காலம் எது?
விடை : 05-10-1823 முதல் 30-01-1874 வரை